|
4, 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு போதுமான சத்துணவு கிடைக்காவிட்டால் உடலும், மூளையும் சரியாக வளராது. இப்பருவத்தில் குழந்தைக்கு அளிக்கப்படும் சத்துணவே வாழ்நாள் முழுவதும் அது எவ்வாறு இருக்கும் என்பதை தீர்மாணிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு போதிய சத்துணவு கிடைக்காவிட்டால் அவற்றின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சத்துக் குறை நோய்களும் ஏற்படலாம். இத்தகைய குழந்தைகளை தொற்று நோய்களும் எளிதாக தாக்குகின்றன.
ஊட்டமின்மையும், தொற்று நோய்களும் ஒன்றிணையும் போது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான குழந்தையை விட ஊட்டசத்து குறைவாகக் கிடைக்கும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கும், தட்டம்மையால் இறக்கும் வாய்ப்பு பத்து மடங்கும் அதிகம். அதேபோல் அடிக்கடி
வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் குழந்தையின் எடை பாதியாக குறையலாம். தட்டம்மை குழந்தையின் எடையில் 10 சதவீதத்தை குறைத்துவிடும்.
|